தமிழ்-தமிழன்-தமிழ்நாடு - தமிழகம்

47. தமிழ் அறிவோம்!

தமிழ் 
தமிழன் 
தமிழர் 
தமிழ்நாடு
தமிழகம் 
உள்ளிட்ட இச்சொற்கள் முதன்முதலில் இடம்பெற்ற இலக்கியங்களைக் காண்போம்.

தமிழ் : 

'தமிழ்' என்ற சொல் முதன்முதலில் இடம்பெற்ற நூல் - தொல்காப்பியம்.

" தமிழ்என் கிளவியும் அதனோர் அற்றே " 
(தொல்காப்பியம் - 386)
 
'தமிழ்மொழி' பேசப்பட்ட நிலத்தை வரையறை செய்துள்ளது தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள சிறப்புப் பாயிரம்.

"வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் 
தமிழ்கூறு நல்லுலகத்து " 
(தொல்காப்பியம் சிறப்புப் பாயிரம் பனம்பாரனார் பாடியது) 

தமிழன் : 

'தமிழன்' என்ற சொல் முதன்முதலில் இடம்பெற்ற நூல் தேவாரம்.
 
"தமிழன் கண்டாய் " 
(அப்பர் தேவாரம், திருத்தாண்டகம் - 23) 

தமிழர் :

' தமிழர் ' என்ற சொல் முதன்முதலில் இடம்பெற்ற நூல் - சிலப்பதிகாரம். 

" அருந்தமிழர் ஆற்றல் அறியாது போரிட்ட 
கனக விசயரை " 
(நீர்ப்படைக்காதை, வஞ்சிக் காண்டம், சிலப்பதிகாரம்)

தமிழ்நாடு : 

'தமிழ்நாடு' என்ற சொல் முதன்முதலில் இடம்பெற்ற நூல் -  சிலப்பதிகாரம். 

"இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய " 
(வஞ்சிக்காண்டம் - 165.  சிலப்பதிகாரம்)

தமிழகம் : 

'தமிழகம்' என்ற சொல் முதன்முதலில் இடம்பெற்ற நூல் - புறநானூறு. 

"வையக வரைப்பில் தமிழகம் கேட்ப "  
(புறநானூறு - 168) 

உலக வரலாற்றில் ஒரு மொழியின் பெயரும்,  அதைப் பேசிய இனத்தின் பெயரும், அது பேசப்பட்ட இடத்தின் பெயரும் இடம்பெற்ற இலக்கியங்களை  ஐயாயிரம் ஆண்டுகளாக  (உலகில் எழுத்து வடிவில் முழுவதும் கிடைக்கப்பெற்ற முதல் நூல் தொல்காப்பியம் . இதன் காலம் ஐயாயிரம் ஆண்டுகள்) காப்பாற்றி வரும் ஒரே மொழி தமிழ்மொழி மட்டுமே. அதிக அளவில் இலக்கியங்களை தன்பால் வைத்திருக்கும் ஒரே உலக மொழி தமிழ்மொழி மட்டுமே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்