வாழ்க்கை

# வாடாமல்லிக்கு ஆயுள் அதிகம் ஆனால் வாசம் இல்லை. 

# வாசமுள்ள மல்லிக்கோ ஆயுள் குறைவு.

# கொம்புல்ல மானுக்கோ வீரமில்லை.

# வீரமுள்ள கீரிக்கு கொம்பு இல்லை.

# கருங்குயிலுக்கு தோகை இல்லை.

# தோகை உள்ள மயிலுக்கோ இனிய குரல் இல்லை.

# நீருக்கு நிறம் இல்லை,

 # நெருப்புக்கு ஈரம் இல்லை,

 # கதிரவனுக்கு நிழல் இல்லை,

 # காற்றுக்கு உருவமில்லை.

ஆக 

# அது இருந்தால் இது இல்லை.

# இது இருந்தால் அது இல்லை.

# ஒன்றைக் கொடுத்து ஒன்றை எடுத்தான் இறைவன். 

# ஒவ்வொன்றுக்கும் காரணம் வைத்தான்.

#எவர் வாழ்விலும் நிறைவில்லை, 

#எவர் வாழ்விலும் குறைவுமில்லை.

 ## நிறை குறை நிறைந்ததே மனித வாழ்க்கை.#

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்